Monday, March 8, 2010

பெய்தாலும் பெய்யும் மழைபோல


எதிர்படும்
சிறுவர்கள்
பதறியோட
குடைமரம் கடந்து
நீள்கிறது
நம் ஒற்றையடிப்பாதை.
பட்டாம்பூச்சிக்கும்
தேன்சிட்டுக்கும் கூட
மணியடித்து
விலக்கச்சொல்கிறாய்.
தூரத்து தென்னைகளும்
குடிசையில் காத்திருக்கும்
உன் பாட்டியும்
நமக்காக சொல்லவிருக்கிற
கதைகளில்
நான் வேகம் கூட்டுகிறேன்.
பெய்தாலும் பெய்யும்
மழைபோல
நீ தரவிருக்கிற முத்தம்
வழியெங்கும்
குளிர்கிறது.

No comments: