Sunday, March 14, 2010

பித்தனைப்போல நான்


வெய்யிலின்
பிள்ளைகளென
மஞ்சள் ஆட்டோக்கள்
தகதகத்து நிற்கின்றன
சிக்னல்களில்.
பயணிகள் நடைபாதையை
ஒற்றையடிப்பாதைஎன
ஆர்வம் கொண்டு
உற்சாகமாய் முனுமுணுத்துப்போகிற
பித்தனைப்போல
நான் உன்
குளிர் புன்னகையை
மனசுக்குள் நினைத்தபடி
என் பிரிய ipod-ஐ
இயக்கத்துவங்குகிறேன்.
சூரியக்கதிர்களின் வாஞ்சையில்
மேம்பாலங்களில் அமர்ந்திருக்கும்
காகங்களின் ஜீவன் பார்த்தபடி
என் மதியம்
மெல்ல நகர்கிறது.

No comments: