Wednesday, June 2, 2010

சொல்வனம்


பற்றியெரிகிறது
என் சொல்வனம் .
அர்த்த ஜ்வாலைகளின் பொன்னிறம்
ஒரு கவிதைக்கான மௌனத்தை
கொடுத்துப்போகிறது.
பெருங்காற்றலைகள்
சிறுபறவைகள் குறித்த
கவலையின்றிச் சுழல்கின்றன.
உன் ஞாபகமாய் வைத்திருக்கும்
ஒன்றிரண்டு சொற்களை மட்டும்
பைக்குள் போட்டுக்கொண்டு
தப்பிக்க முயல்கிறேன்
வலிகளின் ஆதி வழித்தடத்தில்.
நீ புரிந்துகொள்ளாத
இந்த உயிர்
இப்போது அழகாய்த்தெரிகிறது
எனக்கே.

No comments: