Tuesday, June 1, 2010

போர்க்களம்


குருதி கசிய
என் தளவாடங்களை விட்டோடுகிறேன்
களத்தின் போர்தான்
போர்க்களமென யாருமெனக்கு
நினைவூட்ட விரும்பவில்லை.
நீ விரும்பித்தந்துவிட்ட
மௌனத்தின் ஒருபகுதி
தீப்பிடித்தேரிகிறதென
நான் கூச்சலிட முனையவுமில்லை.
வழி நெடுக என் குருதி
வலியோடு எரிய
மெல்ல நகர்கிறது
நன் விரும்பிச்சென்ற போர்க்களமும்
சிலபோர்நுட்பங்களும்.

No comments: