Wednesday, May 19, 2010

மாமழை போற்றுதும்


உருகிக் கரைந்து போய்க்கொண்டிருக்கிறது
இம் மாமழையில்
நீ தந்த வருத்தங்கள் ..
உணர்வுகளில் குளிர் ஏறி மருகுகிறது
உன் அருகாமை வேண்டி..

உன் கதைகள்
உன் வியப்புகள்
நீ தந்த கூழாங்கல்
உன் பிரிய ஜன்னலோரம்
குறுந்தகவல் ஸ்மைலிக்கள்
எல்லாம்
சடசடக்கும் மழை சொட்டுகளாகி
விழுந்து புரள்கின்றன
மேனியிலும் மனத்திலும் ...

மழை சாட்சியாய் கேட்கிறேன்
தேநீர் தயாரிக்க நான் தயார்
என் பிழைகளை மன்னிக்க நீ தயாரா?

No comments: