Sunday, May 9, 2010

பூனைகள் அலையும் இரவு


நடுநிசியில் உன்னை
எழுதத் துடிக்கின்றன விரல்கள்
வெள்ளைப் பூனையின் அலைவுகளென
அறையில் ஒளிரும்
ஒரு குட்டி மஞ்சள் ஒளியோடு
முரண்டுபிடித்து விளையாடும்
என் நினைவுகளின்
அச்சிறு கணங்களிலும்
வானத்தின் நீலம்
உன் கன்னத்தில் இருப்பதாய்
ஊகிக்க முடிகிறது.
வரிசையாய் அடுக்கிவைத்திருக்கும் என்
டெனிம் பெர்ப்யூம் டப்பாக்களின் மீது
உன் பெயரை
உரக்கக் கத்தியபடி
ட்ரம்ஸ் இசைக்கலாம்
போலிருக்கிறது.

2 comments:

ஸ்வரூப் said...

kacheri aarambichiduchu

avlo nalla pera avalodadhu?

கவின் said...

அவ்வளவு இல்லை
"அவ்ளோ...அழகு."