Tuesday, May 11, 2010

அதிதேவதை

அகல விழிக்கும்
சாமிக்கு பயப்படாமல்
கோவில் சுவர்களின்
எதிரொலி உந்த
தம்பி பெயரை
உரக்கக் கத்திப் பார்க்கிற சிறுமி
எனக்கு அதிதேவதை.

No comments: